ஹதீஸ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹதீஸ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 10, 2015

இஸ்லாமிய குண நலன்கள்

இஸ்லாமிய குண நலன்கள்

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க
அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம்
தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன்.
உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத்
தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று
கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்?
எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய
தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய
உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என
தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள்
அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

வெள்ளி, ஜனவரி 24, 2014

நபி மொழிகள்


அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ...

யா அல்லாஹ் ! கிழக்குக்கும் மேற்க்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைபோல் எனக்கும் என் தவறுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக ! யா அல்லாஹ் ! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவது போல் என் தவறுகளை விட்டும் என்னை நீ தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனி கட்டியாளும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை நீ கழுவுவாயாக !
ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)

ஞாயிறு, நவம்பர் 18, 2012

அல்லாஹ்வைப் புகழ்தல்,நன்றி செலுத்துதல் !நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல்!

அல்லாஹ்வைப் புகழ்தல்,நன்றி செலுத்துதல் !நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல்! 
www.islam-bdmhaja.blogspot.com
அல்லாஹு தஆலா கூறுகிறான்:

என்னை நினைவு கூறுங்கள் !நான் உங்களை நினைவு கூறுகிறேன்.எனக்கு மாறு செய்யாதீர்கள்.
                                                                                                      (   அல்குர்ஆன்  2:152)
நீங்கள் நன்றி செலுத்தினால் ,நான் உங்களுக்கு அதிகபடுத்துவேன். (அல்குர்ஆன் 14:7)

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என (நபியே)நீர் கூறுவீராக!    (அல்குர்ஆன் 17:11)

அவர்களின் கடைசிப் பிராத்தனையாகிறது, அகிலங்களின் அதிபதியாகிய அல்ல்ஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதாகும்.                                                                            (அல்குர்ஆன் 10:10)

ஹதீஸ்கள்:

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:நபியவர்கள் மிஃராஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்று பால்,மது ஆகிய இரு கோப்பைகள் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது .நபி(ஸல்) அவர்கள் இரண்டு கோப்பைகளையும் பார்த்துவிட்டு பாலின் கோப்பையை எடுத்துக் கொண்டார்கள்.
அப்பொழுது ஜிப்ரயீல் (அலை)அவர்கள்,இயற்கைத் தன்மையின் பக்கம் உமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ;நீர் மதுவை எடுத்திருந்தால்,உம உம்மத்தினர் வழிகெட்டிருப்பார்கள் எனக் கூறினார்கள்.                                                              (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:அல்ஹம்து லில்லாஹ் கூறுவது கொண்டு தொடங்கபடாத ஒவ்வொரு முக்கிய விஷயங்களும்,பரகத்தை (அபிவிருத்தியை)விட்டு நீங்கியவையாகும்.                                                                 (அபூதாவூது)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:ஓர் உணவை உண்டு,அதற்காக அல்லாஹ்வைப் புகழகூடிய மற்றும் ஒரு பானத்தை பருகி அதற்காக அல்லாஹ்வைப் புகழக் கூடிய அடியாரை நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான். (முஸ்லிம்)

அல்லாஹு தஆலா கூறுகிறான் :
நிச்சயமாக அல்ல்ஹ்வும் அவன் மலக்குகளும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறார்கள்:முஃமின்களே!நபி(ஸல்) அவர்கள் மீது நீங்களும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்!
                                                                                     (அல்குர்ஆன் 33:36)

அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன்.யார் என் மீது ஒரு முறை (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் என) ஸலவாத் கூறுகிறாரோ,அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான் .(தன் அருகொடைகளைப் பொழிகிறான்)                                                             முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்:கியாமத் நாளில் என்னிடம் மிக மேலான அந்தஸ் துடையவர்,மக்களின் என் மீது அதிகமாக ஸலவாத் கூறுபவர் ஆவார்.
                                                                                         (திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:என்னைப் பற்றி கூறப்பட்டு அப்பொழுது என் மீது ஸலவாத் கூறாதவரின் மூக்கு மண்ணைத் தழுவுமாக ! (நாசமாகட்டுமாக )
                                                                                                (திர்மிதி)
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்:என் மண்ணறையை பெருநாளாகக் கொண்டாடப்படும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்!(எனினும்)என் மீது ஸலவாத் கூறுங்கள்!நிச்சயமாக உங்களின் ஸலவாத் (உலகில்) எங்கிருந்தாலும்,என்னை வந்து சேருகிறது.            (அபூதாவூது)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்: யாரிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவர் கஞ்சனாவார்.                        (திர்மிதி)

அபூ முஹம்மது கஃபு பின் உஜரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் நபி (ஸல்) எங்களிடம் .அப்பொழுது நாங்கள் யாரசூலல்லாஹ்!தங்களுக்கு ஸலாம் கூறுவது எவ்வாறு என்பதை  நாங்கள் அறிந்துள்ளோம்.(ஆனால்)தங்கள் மீது ஸலவாத் கூறுவது எவ்வாறு ? என்று கேட்டோம் அதற்க்கு நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீமா இன்னக்க ஹமீதுன் மஜீது அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம ஹமீதுன் மஜீது.

அல்லாஹ்வை நாம் எப்படி நினைவு கூறுவது ,நினைவு கூறுவதினால் என பலன் என்பதை நாம் அறிந்தோம் .அவனுக்கு நன்றி செலுத்துவது ,அவனை அதிகமாக புகழ்வது ,அவனை பற்றி நினைவு கூறுவது அதனால் நமக்கு கிடைக்கும் இரு உலக பலன் ,நன்மைகள் எல்லாம் அறிவோம்! இருப்பினும் நம்மில் எத்தை பேரு அறிந்து இருக்கிறோம் ? நன்மை ,தீமை பற்றி தெரியாத சில பாமரமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர்களின் மன போகில மார்க்கம் என்று செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ,நபி (ஸல்) அவர்கள் மீது எப்படி ஸலவாத் சொல்வது என்பது கூட இன்னும் தெரியாமல் சிலர் இருக்கிறார்கள் ,நபி (ஸல்) அவர்களை பற்றிக் சொல்லும் பொது அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்பது கூட தெரியாத மக்கள் உண்டு ,அப்படி சொல்லாதா மக்கள் மீது நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பது ஹதீஸின் மூலமாக அறியலாம் !அல்லாஹ்வை நாம் அதிகம் அதிகம் நினைவு கூருந்து ,அவனுக்கு நன்றி செலுத்தும் கூட்டமாக நம்மை அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !!! அவனின் தூதர் அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் மீது ,நபி (ஸல்) அவர்கள் எப்படி கற்று தந்தார்களோ அப்படி நாமும் அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத் சொல்ல ,அந்தஸ் பெற கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்கி அருள் செய்வானாக ..ஆமீன் ... 

சனி, அக்டோபர் 13, 2012

அண்ணலார் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான பொன்மொழிகள் !

அண்ணலார் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான பொன்மொழிகள் !
அனாதைகளை ஆதரிபோரின் சிறப்பு :
சஹ்ல் பின் சஃது (ரலி) அறிவிகிறார்கள் :நானும் ,அனாதையை ஆதரித்து பொறுப்பேற்று வர்லர்த்து வரும் சுவர்கத்தில் இவ்வாறு இருப்போம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தங்களது ஆட்காட்டி (கலிமா) விரலையும்,நாடு விரலையும் சற்று விரித்தவர்களாக சுட்டிக் காட்டினார்கள் .
ஆதாரம்: நூல் புகாரி )
பெண்பிள்ளைகளைப் பேணி வளர்பவரின் மாண்பு :
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிகிறார்கள் :யார் தம் பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்க படுத்துகிறாரோ ,அவர் கியாமத் நாளில் வருவார் ,அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக்கூறி அண்ணல் நபி(ஸல்) தங்கள் விரல்களை இணைத்து காண்பித்தார்கள் .ஆதாரம் முஸ்லிம்)
அன்னை ஆய்ஷா(ரலி) கூறுகிறார்கள் :என்னிடம் தன் இருபெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஒரு ஏழைப் பெண்மணி வந்தாள் .அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன் .அதனை அப்பெண்மணி தன் இரு பெண்பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு ,தான் உண்பதற்காக ஒரு பழத்தை தன் வாயின் பக்கம் உயர்த்தினாள் .அதற்குள்ளாக அவ்விரு பெண்பிள்ளைகளும் அப்பழத்தை உண்ணக் கேட்டனர் .உடனே அப்பெண்மணி ,தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாக பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள் .அப்பெண்மணியின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது .நான் இதனை அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன் .அதற்கவர்கள் ,அப்பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாகிவிட்டான் ;நரகை விட்டும் அப்பெண்மணியை விடுவித்துவிட்டான் எனப் பகர்ந்தார்கள் .ஆதாரம் :முஸ்லிம்)
அல்லாஹ் தஆலா கூறுகிறான் : ..இன்னும் நீங்கள் வெற்றி பெறுவதற்காக நன்மையைச் செய்யுங்கள் ! அல்குரான் 22 :77 )
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிகிறார்கள் :ஒரு முஸ்லிம் ,மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார் .அவர் அவருக்கு அநீதி இழைக்கமாட்டார் .யார் தம் சகோதரின் தேவையில் (தேவையை நிறைவேற்றுவதில்) ஆகிவிடுகிரானோ .அல்லாஹ் அவரின் தேவையில் ஆகிவிடுகிறான்  யார் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை போக்கி அவரை மகிழ்விப்பான் .அவருக்கு கியாமத் நாளில் கஷ்டங்களில் ஒன்றைப் போக்கி அல்லாஹ் அவரை மகிழ்விப்பான்  யார் முஸ்லிமின் குறைகளை மறைத்தாரோ அவரின் குறைகளை கியாமத் நாளில் அல்லாஹ் மறைப்பான் .ஆதாரம் :புகாரி ,முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிகிறார்கள் :அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவில நான் செவிமடுத்தேன் .என் உம்மத்தினர்கள் அனைவரும் ஈடேற்றம் பெறுவார் ;(தங்கள் பாவங்களை)பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர .ஒரு மனிதர் இரவில் ஒரு (பாவமானா )செயலைச் செய்து விட்டு காலையில் எழுகிறார் .அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்திருந்தான் .ஆனால் அவர் (மற்றொரு மனிதனிடம்)இன்னாரே !நேற்று இரவு நான் இன்ன இன்ன (பாவங்களை)செய்தேன் என்று கூறுகிறார் .இது பாவங்களை பகிரங்கப்படுத்துவதில் நின்றுமுள்ளதாகும் .அவரது பாவத்தை அவரது இரட்சகன் மறைத்தவராக இரவைக் கழித்தார் .(பின்னர்)பகலில் அவரே அல்லாஹ்வின் திரையை நீக்குபவராக ஆகிவிட்டார் . ஆதாரம்:புகாரி,முஸ்லிம்)www.islam bdmhaja.blogspot.com