சில ஹதீஸ்களை பார்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில ஹதீஸ்களை பார்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 24, 2013

கற்றது கையளவு ......



இறைவனிடம் கையேந்துங்கள் ..அவன் இல்லையென்று சொல்வதில்லை ..
அல்லாஹ்  கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான். நாம் துஆ கேட்பதற்கு தயாரா..?
அல்லாஹ்வின் திருபெயரால் .......

உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை  போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில் ) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது . நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது . மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில்  தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பி விடுகின்றார் . அவ்வாறல்லாமல் அவர் விழிக்க வுமில்லை  , ஒளு செய்யவுமில்லை , தொழவும் மில்லையானால்  அன்றைய காலை பொழுதில் சோம்பல் உடையவராக கெட்ட மனமுடையவராக விழித்து எழுகிறார் .