அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக ஆபாசமாக ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ? அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும் அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!